பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான ரதம் 171 பதை இப்போது தான் அறிந்தேன். அப்பால் அந்த உலகத்திற் பிரவேசிக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு நீங்கிப் போய் விட்டது. மனத்தினிடம் வைத்திருந்த மோஹத்தால், அதைக் கொன்றுவிட்டு நான் இன்பமடைவதில் பிரியங் கொள்ளவில்லை. ' என்னே இப்போது என்ன செய்யச் சொல்லுகிறீர்?' என்று வாயில் காப்பானிடம் கேட்டேன். அதற்கு அவன் ' மானுடா, மனம் இறந்த பிறகுதான் உபசாந்தியுண்டு. அது இருக்கும் வரையில், கவலைகள் நீங்கி இருக்கலாம் என்ற எண்ணம் வீண். கவலேகளாகிய அஸாரர்களே இடைவிடாது பெற்றுத் தள்ளிக் கொண்டே இருக்கும் தாய் மனமேயாகும். உனக்கு அந்தப் பொய்யரக்கியிடம் இன்னும் ப்ரேமை தீரவில்லை. பக்குவம் வந்த பிறகு, t தானே இங்கு வந்து சேரலாம். இப்போது போய்வா: என்று சொன்னன். திடீரென்று அந்தக் கோட்டை, வாயிற். காப்பான், எல்லாம் மறைந்து போய்விட்டது. அரை கூடிணம் கண்ணிருட்சி உண்டாயிற்று. பிறகு கண்ணே விழித்துப் பார்த் தேன். மறுபடி, வீரராகவ முதலித் தெருவில், முன்னே கூறப் பட்ட வீட்டு மாடியில், தனியே கட்டிலில் நான் படுத்துக் கொண் டிருப்பதையும், கடற்பாரிசத்தினின்றும் இனிய காற்று வீசிக் கொண்டிருப்பதையும் கண்டேன். "சரி, போனது போகட்டும். இந்த உபசாந்திப் பேறு நமக்கு இப்போது கிடைக்கவில்லை. ஆயினும், பாதகமில்லே. ஏழை மனத்தைக் கொன்றுவிட்டு நாம் மட்டும் தனியே இன்பமுற விரும்புவதும் நன்றிகெட்ட செய்கையாகுமல்லவா ? அதன் கவலை களையும், உளைச்சல்களையும் பற்றி யோசித்தேனேயொழிய அதன் மூலமாக எனக்குக் கிடைத்திருக்கும் பெரிய பெரிய நன்மைகளைச் சிந்தித்தேனில்லை. எனக்கு உலக வாழ்க்கையே இந்த மனத்தினல் தானே எய்திற்று. இதை ஈசனென்றே சொல்லத் தகும். மேலும், எனக்கு அதையும், அதற்கு என்னேயும் காட்டிலும் உயிர்த்துனே வர் யார் இருக்கிருர்கள் ? அதற்குத் துரோகம் செய்யலாமா ? எத்தனை கோடிக் கவலைகள் இருப்பினும் பெரிதில்லை. மனம் செத்து நான் தனியே வாழ்வதாகிய உபசாந்திலோகம் எத்தனே அரிதாயிருப்பினும், அது எனக்கு வேண்டாம்” என்று தீர்மானம் செய்துகொண்டேன். 'உபசாந்தி என்று கத்தும் மனிதர்களே