பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


காசி நகர் சேர்ந்தான் - இந்தி
கற்று வடமொழியும்
பேசிப் புலமைபெற்றான் - உள்ளம்
பெரிதும் மகிழ்ச்சியுற்றான்

கல்லூரி யில்சேர்ந்தான் - ஆங்கிலக்
கலையில் தேர்ச்சிபெற்றான்
ஷெல்லியின் பாடல்களில் - தனது
சிந்தை பறிகொடுத்தான்

9