பாரதீயம்
திண்னங் காணரீர்! பச்சை வண்ணன் பாதத் தானை : எண்ணம் கெடுதல் வேண்டா ! திண்னம், விடுதலை திண்ணம். ‘ என்ற பாடல்,
கண்ணன் கழல்இணை கண்ணும் மனம்உடையீர் எண்ணும் திருகாமம் திண்ணம் காரணமே. என்ற திருவாய்மொழிப் பாசுரத்தை அடியொற்றி அமைந்ததாகும். மணிவாசகப்பெருமானும், தொண்டரடிப்பொடியாழ்வாரும் தத்தம் கடவுளருக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடியதைப்போலவே, பாரத மாதாவுக்குத் திருப்பள்ளி எழுச்சியும் பாடுகின்றார், பாரதியார். மதலையர் எழுப்பவும், தாய்துயில் வாயோ ?
மாநிலம் பெற்றவள் இஃதுன ராயோ? குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ ? கோமக ளே:பெரும் பாரதர்க் காசே : விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாப் ; இதமுற வந்தெமை ஆண்டருள் செய்வாய்
ஈன்றவளே. பள்ளி எழுந்தரு ளாயே ” இதில் மொழி ஒருமைப்பாடும் தேசிய ஒருமைப்பாடும் மிளிர்வதைக் கண்டு மகிழலாம்.
இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும், பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுக் திழிவுற் றாலும் விதந்தரு கோடி இன்னல்
விளைக்தெனை அழித்திட்டாலும் சுதந்திர தேவி : கின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே. . என்று சுதந்திர தேவிக்குத் துதி பாடுகின்றார். திருத்தொண்டத் தொகையைப் பாடி அடியார் வழிபாட்டைத் தொடங்கி வைத்தவர், சுந்தரமூர்த்தி அடிகள்: இதுவே பின்னர்த் திருத்தொண்டர் அந்தாதி
21. தே.கீ. 12-பாரதமாதா நவரத்தின மாலை-6. 22. திருவாப். 10.5 - 1 23. தே.கி. பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி-5. 24 ன் சுதந்திர தேவியின் துதி-1