பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பாரதப்பண்பாட்டுதளத்தில் பாரதி அ.சீனிவாசன் 18 பிற்காலத்தில் ஏற்பட்ட ஒரு போலி சோம்பேறிவாதமாகும். இதை இந்து தர்மத்தின் ஆதார நூல்கள் குறிப்பிடவில்லை. இடைக்காலத்தில் ஏற்பட்ட இந்த மாயாவாதம் என்னும் போலி வேதாந்தத்தை பகவத் கீதை முழுமையாக மறுத்து அதை நிராகரித்து விட்டது என்பதை பாரதி மிகவும் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார். அதன் வெளிப்பாடாகவே அவருடைய பராசக்திப் பாடல்கள் எழுந்துள்ளன எனக் கூறலாம். |

  • பாரதி, தனது பகவத் கீதை மொழிபெயர்ப்பு நூலுக்கு எழுதிய முன்னுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

"உபநிடதங்களிலும் வேதத்திலும் "மாயா" என்ற சொல் பரா சக்தியைக் குறிப்பது. இடைக்காலத்தில் மாயை பொய்யென்ற தொரு வாதம் உண்டாயிற்று. இதனால், ஐகத் பொய், தேவர்கள் பொய், சூரிய நட்சத்திராதிகள் பொய், மனம்பொய், சைதன்யம் மாத்திரம் மெய். ஆதலால் இந்த உலகத்துக்கடமைகள் எல்லாம் எறிந்து விடத்தக்கன. இதன் இன்பங்கள் எல்லாம் துறந்துவிடத்தக்ன, என்ற தொருவாதம் எழுந்தது. "இந்த உலக இன்பங்கள் எல்லாம் அசாசுவதம், துன்பங்கள் சாசுவதம் இத்தகைய உலகத்தில் நாம் எந்த இன்பங்களையும் செய்யப்புகுதல் வீண் சிரமமாகும்" என்ற கட்சி ஏற்பட்டது. " ஆனால் இவர்கள் எல்லா இன்பங்களையும் துறந்து விட்டதாக நடிக்கிறார்களேயன்றி இவர்கள் அங்ங்னம் உண்மையிலேயே துறக்கவில்லை. இவ்வுலகத்தில் ஜீவர்கள் எல்லா இன்பங்களையும் துறப்பது சாத்தியமும் இல்லை. கடமைகளைத் துறந்துவிட்டுச் சோம் பேறிகளாகத் திரிதல் சாத்தியம். இது மிகச் சுலபமும் கூட, இந்த சோம் பேறித்தனத்தை ஒரு பெரிய சுகமாகக் கருதியே அநேகர் துறவு பூணுகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. " இவர்கள் கடமைகளைத் துறந்தனரேயன்றி இன்பங்களைத். துறக்கவில்லை. உணவின்பத்தைத் துறந்து விட்டார்களா? சோறு இல்லாவிட்டால் உயிர் போய்விடுமே என்றால் அப்போது நீங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுத் தொழில் செய்து ஜீவிக்க வேண்டும். ஆடையின்பத்தை இவர்கள் துறக்கவில்லை. ஸ்நானவின்பத்தை இவர்கள் துறக்கவில்லை. தூக்கவின்பத்தைத் துறக்கவில்லை. கல்வியின்பத்தைத் துறக்கவில்லை. புகழின்பத்தைத் துறக்கவில்லை. உயிரின்பத்தைத் துறக்கவில்லை. வாதின்பத்தைத் துறக்கவில்லை. அவர்களில் முக்கியஸ்தர்களாகிய மடாதிபதிகள் பண வின்பத்தைத் துறக்க வில்லை. அவர்களுடைய போலி வேதாந்தத்தை அழிக்கும் பொருட்டாகவே