பக்கம்:பாரி வேள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுகை 53

உண்டு எவ்வளவு காலத்துக்கு இருக்கமுடியும்? தேனும் பலாப் பழமும் வள்ளிக் கிழங்கும் இருந்தால் போதுமா? காரமும் புளிப்புமுடைய உணவை உண்டு பழகியவர் களுக்கு இவற்றை உண்டால் ஊக்கம் உண்டாகுமா? சில காலம் வீம்புக்கு இவற்றை உண்டு இருக்கலாம். அப்படி உண்டாலும் உடலுக்கு உரம் வருமா? விற்பிடிக்கும் வீறு வளருமா? இன்னும் சில மாதங் களில் பாரி தானே வழிக்கு வந்துவிடுவான்' என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள். ஆல்ை அதுவரை யில் முடி மன்னர் மூவரும் அங்கே இருக்க வேண்டிய அவசியமில்லையென்று நினைத்தார்கள். படைத் தலைவர் களை அங்கே படையுடன் தங்கும்படி விட்டு விட்டு அம் மூவரும் தம் தம் இடங்களுக்குச் சென்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/62&oldid=583880" இலிருந்து மீள்விக்கப்பட்டது