இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இந்தியாவின் சுகதுக்கங்களை நிர்ணயிக்கிற நீதான் மக்கள் எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செலுத்துகிறாய்.
நின் திருநாமம், பஞ்சாபையும் சிந்துவையும் குஜராத்தையும் மகாராஷ்டிரத்தையும் திராவிடத்தையும் ஒரிஸ்ஸாவையும் வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.
அது விந்திய ஹிமாசல மலைகளில் எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை நதிகளின் இன்ப நாதத்தில் கலக்கிறது.
இந்தியக் கடல் அலைகளால் ஜபிக்கப்படுகிறது. அவை நின் ஆசியை வேண்டுகின்றன; நின் புகழைப் பாடுகின்றன.
இந்தியாவின் சுகதுக்கங்களை நிர்ணயிக்கிற உனக்கு
- வெற்றி, வெற்றி, வெற்றி.