பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் முழக்கம் பாவேந்தர் வாழ்ந்த காலம் பொற்க்ாலம். அவர்களோடு அணுகிப் பழகியவர்களைக் காண்பதும், அவர் க ள் கூறுவதைக் கேட்பதும், அவர்களுடைய சொல்லோவியங் களைப் படிப்பதும் பெருமை தருவன. - பாவேந்தர் நூல்களை முதன்முதலில் அழகாகப் பதிப்பித்து வெளியிட்டுப் பெருமை பெற்றவர் முல்லை முத்தையா அவர்கள். தமிழக அரசின் பரிசும், விருதும், பட்டாடை யும், ஏனையோர் பாராட்டையும் பெற்றவர். இந்நூலில் பல அரிய செய்திகளை, கட்டுரை களைத் தொகுத்து வழங்கியுள்ளார் முல்லை முத்தையா அவர்கள். என் தந்தையார் கவிஞர் நாரா நாச்சியப்பன் அவர்கள் பாரதிதாசன் பரம் பரையின் முதல் அணியில் இருப்பவர்; அவரோடு நெருங்கிப் பழகியவர். எனவே, என் முதல் வெளியீடாக இந்நூல் வெளிவரு வதில் எனக்குப் பெருமை ! - - நா. செல்வராசன் -சங்கீதா