பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 காலத்தை வென்ற - கவிதை மறவன் இரா. முத்துக்குமாரசாமி உலகம் எங்கணும் உள்ள தமிழ் ஆர்வம் கொண்ட வர்களுக்கு எ ல் லாம் மறைமலையடிகளார் நூலகத்தின் வாயிலாகத் தமிழ் விருந்து அளித்துக் கொண்டு இருப்பவர் முத்துக்குமாரசாமி. உலகில் வெளிவந்திருக்கும் நூல்கள் அனைத்தையும் அறிந்த நூலகச் செல்வர். . மாபெரும் நிறுவனமான சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தின் ஆட்சியாளராகத் திகழ்பவர். அன்புக்கு இலக்கணமானவர். புத்தக உலகிலே வாழ்ந்து கொண்டிருப்பவர். இந்த நூலுக்காகத் தனிக் கட்டுரை தந்துள்ளார்.