பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 நாம் பெற்ற கருவூலம் அறிஞர் அண்ணு புரட்சிக் கவிஞரின் 55-ம் ஆண்டு நிறைவு விழா, 1946-ம் ஆண்டு சென்னையில் நாவலர் சோம சுந்தரபாரதியார் அவர்கள் தலைமையில் சிறப் பாகக் கொண்டாடப் பெற்றது. விழாவில் அறிஞர் பெருமக்கள் சொற்பொழிவு நிகழ்த்தினர்கள், கவிஞருக்குப் பொன்னடை அணிவித்து, பொற் கிழிவழங்கப்பெற்றது. அப்பொழுது அறிஞர் அண்ணு அவர்கள் நிகழ்த் திய சொற்பொழிவின் சுருக்கம் இங்கே வெளி யிடப் பெறுகிறது.