பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மாண்புமிகு தமிழக நிதி அமைச்சர் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் பட்டமளிப்பு விழா மண்டபத்துக்கு அடிக்கல்லே நாட்டினர், பாவேந்தர் பல்கலைக் கழகத் திறப்பு விழாவை முன்னிட்டு அவரது பெயர் பொறிக்கப்பட்ட அஞ்சல் உறையை மாண்புமிகு பாதுகாப்பு அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் வெளியிட, மாண்புமிகு தமிழக முதல்வர் அதைப் பெற்றுக் கொண்டார். பல்கலைக் கழகச் சின்னம் பொறிக்கப்பட்ட கேடயங்களைச் சிறப் பு விருந்தினர்களுக்கு, மாண்புமிகு கல்வி அமைச்சர் வழங்கினர். அடுத்து, சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் திரு. சாந்தப்பா அவர்கள், முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள், மேலவைத் தலைவர் சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்கள் ,மாண்புமிகு நிதி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் ஆகியோர் உரை

  • ४ நிகழ்த்தினர். to

அதன்பின்னர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பேருரையாற்றினர். - பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் மணி சுந்தரம் நன்றி கூறினர். இரவு 10 மணிக்கு கலைமாமணி சாமுண்டீஸ்வரி குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியுடன் முப்பெரும் விழா இனிதே நிறைவேறியது. ..(விழாவின் சொற்பொழிவுகளின் சுருக்கத்தை அடுத்துக் காணலாம்) -- - - - - - - -