பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 இருண்ட வீட்டில் இருக்கின்றீரா? எடுத்துக் கொள்க குடும்ப விளக்கை: மருண்ட நெஞ்சர் சஞ்சீவிச் சாரல் வஞ்சியின் பேச்சில் நெஞ்சங் திளைக்க! சிரித்தறி யாதார் அழகின் சிரிப்பைத் திறந்தாற் போதும் தீர்ந்திடும் துன்பம்; உரித்த செல் வாழை உயர்சுவைக் காதல் ஒவ்வொரு நூலிலும் உமை வரவேற்கும் பாண்டியன் பரிசு வேண்டுமா? வருக! பைந்தமிழியக்கப் பாசறை புகுக! - ஈண்டென் அழைப்பினை ஏற்றுவங் தீரேல் எதிர் பாராத முத்தமுங் கிடைக்கும். அள்ளும் நகைச்சுவை நாடகங் காணலாம்; ஆடை நனையாமல் அருவியிற் குளிக்கலாம்; பிள்ளைகட் கான பாடலும் உண்டே! - பெற்ற மகாரொடு சுற்றமுஞ் சூழ் (வள்ளல்) (வள்ளல்) (வள்ளல்) (வள்ளல்)