பக்கம்:பாற்கடல்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

207


மேனும் சம்பாதித்திருக்கலாம். அவர்களுக்குத் தோன்றவும் இல்லை, (பிழைக்கத் தெரியாதவர்கள்!) அவர்கள் இணங்கினாலும் பெரியவர்கள் சம்மதித்திருக்கமாட்டார்கள். தவிர, இப்போது போல், விளம்பரம் ஒரு சாஸ்திரமாக அந்நாளில் முன்னேறவில்லை. எப்படியேனும் இருந்துவிட்டுப் போகிறது.

கொழ கொழ கன்னே –

குழந்தை பிறந்த பத்தாம்நாள் தொட்டிலிலிட்டு ஆட்டி நாமம் சூட்டிப் பெண்டிர் பாடுகிறார்கள். அப்போதே அந்தப் பிறவிக்கு, இந்த ஜன்மா பூரா சேர வேண்டிய ஆசீர்வாதங்களையும், பாதுகாப்பு வரங்களையும் ஜாதகப் படி கிரஹ தேவதைகளும் வேளையின், குடும்பத்தின் நற்தேவதைகளும், ராசி தேவதைகளும் வழங்கிவிடுகின்றன. இது என் நினைப்பு. பிதுர்க்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ததாஸ்து, Life's fairy-taie.

கூடவே துர்த்தேவதைகளும் தங்கள் சாபங்களை.

ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்து சுப்ரமணியன் ஜுரமென்று படுத்தவன் ஒரு வாரத்தில் செத்துப் போனான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/213&oldid=1534316" இலிருந்து மீள்விக்கப்பட்டது