இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
230
லா. ச. ராமாமிருதம்
இருக்க முடியாது” அப்பா புன்னகை புரிகிறார். ஆனால் அந்தப் புன்னகையில் தெம்பு இல்லை.
”அநாவசியமாகக் கவலைப்படாதேடா! நாங்கள் எல்லாம் ஏதுக்கிருக்கோம்! பெருந்திருவே எங்கேயும் போயில்லேடா !”
சம்பாஷணை இந்த முறையில் நடந்ததாகவோ, இவ்வளவு தெளிவாகவோ ஞாபகத்தில் இல்லை. நினைவில் நிற்காததைக் கொஞ்சம் இட்டு நிரப்பியிருக்கிறேன். ஆனால் ஒன்று சந்தேகமற வெளிச்சமாயிற்று.
பெங்களுரை விட்டாச்சு.
எங்கள் பெங்களூர் வாழ்க்கை முடிந்தது.
பெங்களூரை விட்டுக் காலை உதறியாச்சு.
குடும்பம் சென்னைக்கு வந்துவிட்டது.