பக்கம்:பாற்கடல்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336

லா. ச. ராமாமிருதம்


அப்பா! அடிகள் மார்மேல் இறங்குகின்றன. அத்தனை கரங்களும் ஒரே நிதானத்தில், ஒரே இடைவெளியில், ஒரே எண்ணத்தில், ஒருமித்த மனோலயத்தில்—

திடும்! திடும்! திடும்! அடியா அது! இடி! இடியா அது? இப்போது தோன்றுகிறது. அன்று பண்டையில் நடந்த பாவச்செயலுக்குப் பச்சாதாப துக்கம். அந்த ரத்தில் மாரடித்துக் கொள்பவர்களுக்குத் தனித்தனியாகச் சரகு பிரிந்து ஒரு பெரிய, பிரமாண்டமான orchestral movementஇல் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. மூடுபனியில் திடீரென விளிம்பு காட்டும் Iceberg எட்டவும் இருக்கிறது, கிட்டவும் தோன்றுகிறது. நான் துக்க மலை.

இப்போ எனக்கு பயம்கூடத் தெரியவில்லை ஏதோ பரவசம்.

திடீரென வெயில் தன் சுய வெம்மையைக் காட்டுகிறது. சூரியனை மறைத்த மப்பு கலைந்துவிட்டது.

இந்தக் கூட்டத்தை அடுத்து பெல்ஸ் ரோடில் இன்னொரு மாரடிச் சத்தம் தனித்துக் கேட்கிறது. முதல் கூட்டம் நகர்கிறது. அடுத்த batch வந்துவிட்டது. அந்த முக்கில் (pycrafts Road - Bells Road) ஒரு மசூதி இருக்கிறது. அதனால் இங்கே துக்கக் காணிக்கை தனியாகச் செலுத்தியாகிறதோ?

இரண்டு மூன்று நிமிடங்கள்தான். ஆனால் எத்தனை யுகங்கள்! நேரத்தை அதன் கணக்கழித்து நிறுத்தியாகிவிட்டது.

”ஆலி! ஜூலா! ஹஸ்ஸேன்! ஹுஸ்ஸேன்”

அடுத்த batch—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/342&oldid=1534599" இலிருந்து மீள்விக்கப்பட்டது