பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ஒட்டு மாங்கனிகள் இரண்டு இனங்களை ஒட்டி உண்டாக்கும் ஒட்டு மாங்கனிகள் சிறந்தனவாகக் கருதப்படுகின்றன. மற்றும் பயறு வகைகள் போன்றவற்றிலும் இத்தகைய ஒட்டு வேலை செய்து வளர்ச்சி உண்டாக்கப்படுகிறது. மாடுகளிலும் ஈரின ஒட்டுகளால் பிறந்தவை மிக்க வளர்ச்சி உடையன வாய்க் கருதப்படுகின்றன. மக்களுள்ளும் தமக்கை மகள் போன்ற நெருங்கிய உறவுடையவர்களுக்குள் மணஞ் செய்து கொண்டவர்கட்குப் பிறக்கும் குழந்தைகள் வளர்ச்சி குன்றியவராவார்கள் என்னும் கருத்து கூறுவது. உண்டு. நடைமுறையிலும் சில குடும்பங்களில், இந்நிலைமையைக் காணலாம். எட்டிய உறவினர்கட்குள் அல்லது வெவ்வேறு இனத்தவர்கட்குள் மணந்து கொண்ட வர்களின் குழந்தைகட்கு நல்ல வளர்ச்சி இருப்பது கண் கூடு. இலக்கியங்களிலும் இத்தகைய அமைப்பு உண்டு. திருக்குறள் உயரின இலக்கியம். இந்த நூல் கருத்துகள் அமையப் பெற்ற வேறு இலக்கியப் பாடல்கள் சிறந்த ஒட்டு மாங்கனிகள் போல் சுவைக்கப்படுகின்றன. கம்பராமாயணச் சொற்பொழிவாளர் ஒருவர், கம்பராமாயணத்தில் எடுத்தாளப்பட்டுள்ள திருக்குறள் பாக்கள் சிலவற்றை அறிவிக்கும்படி என்னிடம்(சு.ச.இடம்) கேட்டார். நான் எழுதியுள்ள அயோத்தியா காண்ட ஆழ்கடல்,' சுந்தரகாண்டச் சுரங்கம்’ என்னும் இரு. நூல்களிலும், திருக்குறள் ஆட்சி என்று தலைப்பிட்டுச்