பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பால காண்டப் ஒருவர் இரண்டாவதாகச் செய்த நூல் வழிநூல் எனவும் இவற்றை ஓரளவு சார்ந்து செய்யப்பட்ட நூல் சார்பு நூல் எனவும் பெயர் வழங்கப்படும் கம்பர் தமது நூல் வழி நூல் என்கிறார். அதாவது:- வடமொழியில் மூவர் இராமகாதை எழுதியுள்ளனர்; அவர்களுள் முற்பட்டவர் உரைத்துள்ளபடி யான் தமிழ்ப் பாடல்களால் இராம காதையை எழுதுகிறேன் என்று கூறியுள்ளார் : தேவ பாடையின் இக்கதை செய்தவர் மூவர் ஆனவர் தம்முளும் முந்திய நாவினான் உரையின்படி நான்தமிழ்ப் பாவினால் இது உணர்த்திய பண்புஅரோ (10) தேவபாடை = வடமொழி எனப்படும் சம்சுகிருதம். பாடை = பாஷை, மூவர் எனப்படுபவர், வால்மீகி-வசிட்டர். போதாயனர் எனச் சிலரும், வால்மீகி - வசிட்டர் - அகத்தியர். எனச் சிலரும், வால்மீகி-வியாசர்.போதாயனர் எனச் சிலரும், வால்மீகி - பாசகவி - காளிதாசர் எனச் சிலரும் ப ல வ ா று கூறுகின்றனர் எல்லாரும் வால்மீகியை விடவில்லை. எனவே, மூவருள் முந்திய நாவினான்' என்பது வால்மீகியைக் குறிக்கும். எனவே, வால்மீகி ராமாயணத்தின் வழிநூல் கம்ப ராமாயணம் என்பது பெறப்படும். - நூல் பெயரும் எழுதிய இடமும் : உயர் நிலையுடைய நாயகனாகிய திருமாலின் பிறவிகளுள் (அவதாரங்களுள்) ஒன்றாகிய இராமரது பிறவியின் செயலைப் பற்றிக் கூறும் இராமாவதாரம்? என்னும் பெயருடைய - யாப்புத் தொடை அமைந்த குற்றமற்ற இக்கதை நூல்,சடையப்பவள்ளலின் வெண்ணெய் நல்லூர் என்னும் ஊரிலே இயற்றப்பட்டதாகும். கடையின் கின்று உயர் நாயகன் தோற்றத்தின் இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த் தொடை கிரம்பிய தோம் அறு மாக்கதை சடையன் வெண்ணெய் நல்லூர்வயின் தந்ததே (11)