பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பால காண்டப் அழகு என்னும் பண்பும் மேலும் புதுமை பெற்றதாகவும் கூறலாம். அண்ணலும் அவளும்: கம்பர் ஒரு காதல் காட்சியைப் படம் பிடித்துக் காண்பித்துள்ளார். சீதை மாளிகையின் மேல் தளத்தில் தோழியருடன் நின்றுகொண்டிருக்கிறாள். அந்த மாளிகைத் தெருவில் இராமன் விசுவாமித்திரருடனும் இலக்குவனுடனும் சென்று கொண்டிருக்கிறான். தற்செயலாக அண்ணலும் அவளும் (இராமனும் சீதையும்) ஒருவரை ஒருவர் நோக்கிக் கொள்கின்றனர். நோக்கம் ஆரம்பக் கட்டத்திலிருந்து ஆழ்ந்த கட்டத்திற்குப் போய்விட்டது. சீதையின் இரு கண்களாகிய இரு வேல்கள், இராமனின் தோள்களில் ஆழ்ந்து பதிந்தன. இராமனின் கண்களோ சீதையின் மார்பகத்தில் தைத்துக் கொண்டன. கயிறு இழுப்புப் போட்டி : கயிறு இழுப்புப் போட்டியில் இருவர் எதிர் எதிராக இரு பக்கங்களில் நின்று கொண்டு கயிற்றை இழுப்பர். ஒத்த வலிமையினராயின், அவரவரும் அவரவர் இடத்தி லேயே இருப்பர். ஒருவன் மற்றவனினும் மெலியனாயின் அவன் வலியவன் பக்கம் இழுக்கப்பட்டுவிடுவான். இதுதான் இயற்கை நிலை. ஆனால் சீதையும் இராமனும் ஒரு புதுவகைக் கயிறு இழுப்புப் போட்டி நடத்தினர். இருவரும் நோக்கு என்னும் கயிற்றால் உள்ளம் என்னும் கை கொண்டு ஒருவரை ஒருவர் இழுத்தனர். ஆனால், இயற்கைக்கு மாறாக, இருவருமே ஒருவரிடத்தை மற்றவர் அடைந்தனர். அதாவது, சீதையின் இதயத்தை இராமனும் இராமனின் இதயத்தைச் சீதையும் மாறி அடைந்தனர். முதல் காட்சியிலேயே முற்றிய நிலைக்குச் சூழ்நிலை நேர்ந்து விட்டது. .