பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 47. திருக்குறள் காதலர்கள் : திருவள்ளுவர் ஒரு காதல் காட்சியை மிகவும் நாகரிக மாகப் படைத்துக் காட்டியுள்ளார். காதலன் நோக்கும் போது காதலி பார்க்காதது போல் தலைகுனிந்து தரையைப் பார்க்கிறாளாம். காதலன் பார்க்காதபோது காதலி புன்முறுவலுடன் நிமிர்ந்து அவனைப் பார்க் கின்றாளாம். இரவில் பேருந்துகள் (பஸ்கள்) எதிர் எதிராக இயங்கும்போது, ஒரு வண்டி இயக்குநர் விளக்குப் போட்டால் எதிர் வண்டியினர் விளக்கை நிறுத்தி விடுவார். அவர் விளக்குப் போட்டால் இவர் நிறுத்தி விடுவார். இது போன்றல்லவா இந்தக் காதலர்களின் காட்சி இருக்கிறது! 'யான் நோக்குங் காலை கிலன் நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்’ (1094) என்பது குறள். புதுமுகமும் பழமுகமும் : திருவள்ளுவர் காதலர்களின் நோக்கை இவ்வளவு நாகரிகமாகக் கூறியிருக்க, கம்பரோ மிகவும் பச்சையாகக் கூறியிருக்கிறார், இதற்குத் தக்க காரணம் உள்ளது. திருவள்ளுவரின் காதலர்கள் புதுமுகங்கள். கம்பரின் காதலர்களோ மிகவும் பழைய முகங்கள் கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப் பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ?” என்று கம்பர் பாடி இராமன்- சீதை காதலை நாகரிகப் படுத்திக் காட்டியுள்ளார். இருவரும் இரண்டு உடல்கட்கு ஒர் உயிர் ஆயினர். திருவள்ளுவரின் காதலர்களோ ஒருவர் பார்க்குங்கால் மற்றொருவர் பார்க்கவில்லை. கம்பரின் காதலர்களோ, ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொள்கின்றனர். இருவர் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி உண்ணப் பார்க்கின்றனவாம். நோக்கின் வாயிலாக நிலை தடுமாறி