பக்கம்:பாலபோதினி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

[சொல்லதிகாரம்

உ-ம். நான் வந்தேன், நீவந்தாய், அவன் வந்தான், அவள் வந்தாள், அவர் வந்தார், அதுவந்தது, அவை வந்தன.
9
ஒருவாக்கியத்தில் எழுவாயும் பயனிலையும் ஒன்றும் பலவுமிருக்கலாம். பயனிலையாகவரும் வினைகளில் கடைசிவினைமாத்திரம் முற்றுவினையாக வரும்.
உ-ம். இராமனும் கிருஷ்ணனும் வந்தார்கள். பல எழுவாய்கொண்டின. இராமன்வந்துபல பாடங்களைக்கற்றான். பலபயனிலைகொண்டு கடைசிவினை முற்றுவினையாயிருந்தது.
10
ஒருவாக்கியத்திற் பலஎழுவாய்களிருந்தால் பயனிலை பன்மையாக இருக்க வேண்டும். அஃறிணையில் சில போது ஒருமையும் இருக்கலாம்.

உ-ம். இராமனும் கிருஷ்ணனும் வந்தார்கள்.

ஆடுமாடுகள் வந்தன.

ஆடுமாடுகள் வந்தது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/31&oldid=1533932" இலிருந்து மீள்விக்கப்பட்டது