பக்கம்:பாலும் பாவையும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 அவ்வளவுதான்; அகல்யாவின் உள்ளம் 'இனிமேல் என்ன நடக்கும்?' என்பதை விட்டுவிட்டு அவன் சொன்னதைப் பற்றிக் கொண்டது. 'அதெல்லாம் ஒன்றும் நடக்காது!’ 'அதெல்லாம் ஒன்றும் நடக்காது!’ 'அதெல்லாம் ஒன்றும் நடக்காது!’ அவள் இப்பொழுது கொஞ்சம் தைரியத்துடன் நடந்தாள். ஆனால் அந்தத் தைரியம் நெடுநேரம் நீடிக்கவில்லை. மேலே நாலு அடிகள் எடுத்து வைத்ததும் வேறு யாரோ இருவர் அவளுக்கு எதிரே பேசிக்கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவன், 'ஊஹலம்' நான் அவனைச் சும்மா விடப்போவதில்லை’ என்று மற்றொருவனிடம் இரைந்து சொன்னான். அடுத்த வினாடி அகல்யா வின் உள்ள ம் - 'அதெல்லாம் ஒன்றும் நடக்காது! என்பதை விட்டு விட்டு அவன் சொன்னதைப் பற்றிக் கொண்டது. 塞 --سیلیے مینامیبیایی 'ஊஹம்ை; நான் அவனைச் சும்மா விடப் போவதில்லை.” t f員 'ஊஹலம்; நான் அவனைச் சும்மா விடப் போவதில்லை. 'ஊஹூம்; நான் அவனைச் சும்மா விடப் போவதில்லை.” அவ்வளவு தான்; சற்று நேரத்துக்கு முன்னால் அவள் கொண்ட தைரியம் அவளை அடியோடு கைவிட்டுவிட்டது. மறுபடியும் பயம் வந்து அவளை ஆட்கொண்டுவிட்டது. ஆயினும் அவள் சளைக் கவில்லை: தன் இதயத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு மேலே நடந்தாள், நடந்தாள், நடந்துகொண்டே இருந்த்ாள். சுமார் அரை மணி நேரம் நடந்த பிறகு கனகலிங்கம் i o