பக்கம்:பாலும் பாவையும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: சகோதரி சரளாவுக்கு....... *爱 • هم உங்கள் கடிதம் கிடைத்தது என்னுடைய கதையைப் படித்ததோடு கடிதமும் எழுதியிருக்கிறீர்கள மிகவும் மகிழ்ச்சி; நன்றி உங்களைப்போல் இன்னும் ப்ல சகோதரிகள எனக்குக் கடிதம எழுதியிருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம தனித் தனியே பதில எழுதுவதற்கு அவகாசமும் இல்லை. அவசியமும் இல்லை இருந்தாலும். ஏதோ ஒர் இனந்தெரியாத உணர்ச்சி என்னை இந்தக் கடிதம் எழுது மாறு துண்டுகிறது, எழுதுகிறேன் - இதுவும் அவசியமில்லை ஏன்று யாராவது கருதினால், அவர்கள் இந்த இரண்டு பக்கங்களையும் கண்ணை மூடிக் கொண்டு தள்ளிவிடலாம்; கதையை மேலே படிக்கலாம் ஆனால், நீங்கள் மட்டும் இந்தக் கடிதத்தைப் படிப்பதோடு கதையையும் இன்னொரு முறை படிதது. பார்க்க வேண்டும் அப்படிப் படித்தால் உங்களுக்கு உண்மை இன்னதென்று விளங்கும் நீங்கள் நினைப் பதுபோல் பெண் குலத்தை மாசு படுத்துவதற்காக நான் இந்தக் கதையை எழுத வில்லை, தூய்மைப்படுத்துவதற்காகவே எழுதியிருக்கிறேன் இந்தக் கதையில் வரும் அகல்யாவிடம் எவ்வித வெறுபடிம எனக்கு இல்லை அவள் பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவள் என்று குறிப்பிடுமபோது மட்டும், எனக்கு அந்த இனத்தின்மேல் இயறகையாக உள்ள வெறுப்பை ஓரளவு காட்டியிருக்கிறேன்-அவ்வளவுதான்'