பக்கம்:பாலைச்செல்வி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 கடவுளரும் அடிபணிவர் ஒழுக்கம் குன்றிய இழுக்கம் உடையாரையும் உயர்ந்தோராக்குவது பொருள் அறத்தை வளர்ப்பது பொருள்; இன்பத்தைத் தருவது பொருள்; அருளையும், அன்பையும் வளர்ப்பதும் பொருள்; பகையை அறுப்பது பொருள்; நட்பை வளர்ப்பது பொருள்; புகழைத் தருவது பொருள்; பிழையை மறைப்பது பொருள் எனப் பொருளின் சிறப்பறிந்த ஓர் இளைஞன், அண்மையில் மணந்து கொண்ட தன் ஆருயிரனைய மனைவியையும் மறந்து, அப் பொருளிட்டிக் கொண்டு வரப் போய் விட்டான். அவன் பிரிவால் பெரிதும் வருந்தினாள் அவள் மனைவி. அவனையே நினைந்து அழுது அழுது அவள் கண்கள் உறக்கத்தை மறந்தன. அதனால் அவை மாசு படர்ந்து பார்வை குன்றின. அவள் மேனி வாடிற்று. கைவளைகள் கழன்று ஓடின. பிறர் கண்டு பாராட்டத்தக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/126&oldid=822128" இலிருந்து மீள்விக்கப்பட்டது