பக்கம்:பாலைச்செல்வி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 இ. புலவர் கா. கோவிந்தன் தொய்யகம் தாழ்ந்த கதுப்புப்போல் துவர்மணல் வையைவார் அவிர்அறல் இடைபோழும் பொழுதினான்; விரிந்துஆனா மலராயின், விளித்துஆலும் குயிலாயின், பிரிந்துஉள்ளார் அவராயின், பேதுறு உம் பொழுதாயின், அரும்படர் அவலநோய் ஆற்றுவள் என்னாது 10 வருந்தநோய் மிகுமாயின், வணங்குஇறை! அளிஎன்னோ! புதலவை மலராயின், பொங்கர்இன வண்டாயின், அயலதை அலராயின், அகன்றுஉள்ளார் அவராயின், மதலையில் நெஞ்சொடு மதன்இலள் என்னாது, நுதல்ஊரும் பசப்பாயின் நுணங்குஇறை! அளிஎன்னோ! 15 தோயின அறலாயின், சுரும்பார்க்கும் சினையாயின், மாவின தளிராயின், மறந்துஉள்ளார் அவராயின், பூஎழில் இழந்தகண் புலம்புகொண்டு அமையாது பாயல்நோய் மிகுமாயின், பைந்தொடி! அளிஎன்னோ! எனவாங்கு, 20 ஆயிழாய்! ஆங்கனம் உரையாதி, சேயார்க்கு நாம்துது மொழிந்தனம் விடல்வேண்டா; நம்மினும் தாம்பிரிந்து உறைதல் ஆற்றலர்; பரிந்து எவன் செய்தி? வருகுவர் விரைந்தே.” இளவேனிற் பருவம் வரக் கண்டும், தலைவன் வாரானாக, வருந்திய தலைவி, தூதுவிடக் கருதத் தோழி, நம்மினும் வருந்துயர் அவர், விரைந்து வருவர்! எனக் கூறி ஆற்றுவித்தது இது. 1. சினைய, கணைய- கோட்டுப்பூவும், நீர்ப்பூவும், 2. நாடினர் - தேடிச் சென்று; கொயல்-கொய்தல்; நயந்து- விரும்பி, 3. தோடு அவிழ் - இதழ் விரிந்த கண்ணி - தலைமாலை, தையுபு - கட்டி:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/207&oldid=822217" இலிருந்து மீள்விக்கப்பட்டது