பக்கம்:பாலைப்புறா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிவு செய்ய விரும்புகிறேன். தினந்தந்தியின் தலைமைச் செய்தியாளர் சுகுமாரன் அவர்கள் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்துவிட்டு, என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அடுத்த அத்தியாயம் என்ன என்று என்னை கேட்பார். எத்தனையோ தலைவர்களை இனிமை யோடு குறுக்கு விசாரணை செய்து,அற்புதமான செய்திகளை தினத்தந்திக்கு அள்ளித்தரும் அவர், அத்தனை வேலைப்பளுவிலும் ஞாயிற்றுக்கிழமை நான் முதலில் படிப்பது பாலைப்புறாவைத்தான் என்று நெகிழ்ந்து சொல்வார். இப்படி தமிழகமெங்கும் பல வாசகப்பெருமக்கள் சொல்லியிருக்கிறார்கள்.

பாலைப்புறாநூலை படித்துவிட்டு இதனை பக்கத்திற்கு பக்கம் வண்ண ஒவியங்களை இணைத்து வெளியிட வேண்டும் என்று என்னை ஊக்கப் படுத்தியவரும், தனித்துவம் மிக்க சிந்தனையாளருமான மீடியா ஆர்ட்டிஸ் உரிமையாளர் அருண்iரப்பன்.அவர்களுக்கு என் நன்றி உரித்தாகும்.

பாலைப் புறாவை முழுமையாகப் படிக்கும், வாசக பெருமக்கள், இது குறித்த தங்கள் கருத்தை எனக்கு, எழுத வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்... இந்த எனது எதிர்பார்ப்பு இனிதாய் நிறைவேறும் என்று நம்புகிறேன்.

-க.சமுத்திரம்

xvi

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/17&oldid=635608" இலிருந்து மீள்விக்கப்பட்டது