பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 69 மானத்தை இழப்பேனோ? (மார்கழி மாதம் திருவாதிரை நாள் - என்னும் மெட்டு] ஐம்பதி னாயிரம் ஆண்டுமுன் பிறந்த அருந்தமிழ் வளர்க்காமல் மொய்ம்பிலதான வடமொழி பேசி-என் வாழ்வைக் குலைப்பேனோ? மெய்யின் முற்பிறந்த மேந்தமிழ்ப் பாடி மேம்பட்டு வாழாமல் பொய்யின் பிற்பிறந்த வடமொழி பேசி-என் பூண்டை அறுப்பேனோ? செந்தமிழ்ப் பாடி உயிர்நலந் தேடி-என் சித்தத்தை உயர்த்தாமல் வந்தவர் மொழியாம் வடமொழி பேசி-என் வாழ்வைச் சிதைப்பேனோ? வள்ளுவன் குறளை, தொகையினைப் பாட்டை வாய்மகிழ்ந் துரைக்காமல் எள்ளுறும் மனுவை வேதத்தைப் பாடி-என் இனத்தைப் புதைப்பேனோ? - சிலம்புமே கலையினைச் சிந்தா மணியினைச் சீருறப் பாடாமல் புலம்புபா ரதத்தினை இராமா யணத்தினைப் போற்றிநான் அழிவேனோ? வடவரின் மொழியை இந்தியென் பேயை வழிவழி தவிர்க்காமல், முடவனைப் போலொரு குருடனைப் போல்மனம் முரண்படக் கிடப்பேனோ?