பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தலைவர்கள் தமிழ்நலம் காக்க! செத்திடும் தமிழ்ஞா லத்தின்செந்தமிழ் நலத்தின் - நோக்கம் ஒத்திடும் உணர்வால் மக்கட் குண்மையில் பொதுத்தொண் டாற்ற வித்திடும் தலைவர்க் கெல்லாம் வேண்டுதல் ஒன்று கேட்பேன்; 'முத்திடும் கடல்சூழ் நாட்டின் முதுதமிழ் மொழிகாப் பீரே! 'தமிழ்நலம் காத்தல் ஒன்றே தமிழினம் காத்தற் கொப்பரம்! கமழ்தரும் தமிழ்ந லத்தைக் கலப்பினால் கெடுப்பீ ராயின் உமிழ்தகு நிலைவந் தெய்தும்! உயிர், மொழி, இனம், மெய் யன்றோ? அமிழ்வது மொழிமுன் என்றால் அழிவுறும் இனம்.நா டென்பீர்' - 1978