பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 செந்தமிழைத் தீய்க்கும் சீர்திருத்தம்! கொச்சைத் தமிழும் கொடுந்தமிழும் கூறவெண்ணாப் பச்சைத் தமிழும் பயின்று நிதம் - நச்சுறுத்திச் செந்தமிழைத் தீய்க்கும் சிறுமையரே சீர்திருத்தம் எந் தமிழ்க்குச் செய்யவந்தார் இங்கு! சொற்பிழையால் வேற்றுமொழிச் சொற்கலப்பால் இன்தமிழைக் கற்பழிக்கும் தீய கயவோரே - பொற்புடைய செந்தமிழை இங்குத் திருத்தவந்தார் தாமதற்குச் சொந்தமென்று கொண்டாடிச் சூழ்ந்து! எழுத்தால் உரையால் இலக்கணத்தை என்றும் கழுத்தை முரிக்கின்ற காரறிவார் இங்கே எழுத்துத் திருத்தம் இயற்றுகின்றார் நண்டு கொழுத்துத் திரிவதுபோல் கொண்டு! கலப்புமொழி யால்,எம் கனித்தமிழை நாளும் உலப்புகின்ற தீய உலுத்தர் - வலுப்பெறவும் செய்யாத் திருத்தமெல்லாம் செய்வார், நாய் சான்றவை, வாய் வையாப் புகுந்ததுபோல் வந்து. - 1978 சான்றவை - சான்றோர் அவை. 2. வாய் வையாப் புகுந்தது - வாய் வைக்கப்புகுந்தது. 78