பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. 72 96 நாடற்றுப் போவாய்...! பீடற்ற இந்திப் பிணிப்பைப் பெயர்த்து, இப் பெருநிலத்துள், ஈடற்ற செந்தமிழ்த் தாயை அரியணை ஏற்றிலையேல், ஏடற்று முன்செய் எழுத்தற் றிருக்க இடமுமற்று, நாடற்றுப் போவாய் தமிழா, இனுஞ்சில நாட்களிலே! மாளல் வில்லெடுத்துப் போரிட்ட விறலெங்கே? வெற்றிபெறும் மணிமார் பெங்கே? கொல்லவரும் வெம்புலிமேற் குறிதவறா தெய்கின்ற கூர்வேல் எங்கே? சொல்லெடுத்துப் பேசிடவும் அஞ்சுகின்றாய்! சோற்றுக்கு மானம் விற்றாய்! மல்லெடுத்த இந்திக்கு மருள்கின்றாய்! தமிழா, நீ மாளல் நன்றே! - 1963 நன்று! - 1964