பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 9 70 95 தமிழ்ப் பயிரில் இந்தித் தீ! செழிக்கின்ற தமிழ்ப்பயிரில் இந்தியெனும் செந்தியை மூட்டி விட்டே, அழிக்கின்றார் தமிழினத்தை! ஆரென்று கேட்பதற்கோ ராளிங் கில்லை! மொழிக்கின்று வந்தநிலை தவிர்க்கிலமேல் தமிழ்நாட்டை அடிமை சூழும்! ஒழிக்கின்ற சூளுடனே கொல்களிறு போல்எழுந்து முனைவீர் இன்றே! - 1963 தமிழா. எப்படி? என்னபடி மக்களெல்லாம் எதிர்த்தாலும், தமிழ்நாட்டில் இந்தி யைத்தாம் - சொன்னபடி புகுத்துவதே முதற்படியாய் வடநாட்டார் கொண்டு விட்டார்! அன்னபடி நடந்திடவே அமைச்சரெல்லாம் அடிபண்ணிந்தார்! தமிழா, இன்னும் இன்னபடி நீ கிடந்தால் எப்படித்தான் மேற்படியை எட்டு வாயோ? -19ss