பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 67 68 94 தூள் தூள் தூளே! ஊராளும் தலைவர்க்கே ஒன்றுரைப்போம்; உணர்கஅவர், "ஒண்ட மிழ்த்தாய்ப் பேராளும் இடத்திலெல்லாம் பிள்ளைமொழி இந்தியினைப் புகுத்து கின்றீர்! சீராளும் செந்தமிழர்: பொறுத்திருந்தார் இனிப்பொறுக்கார்! புலியைப் போல, ஏராளம் தமிழ்நிலத்தில் அவர்எழின், உம் எண்ணமெலாம் தூள் தூள் துளே!” - 1963 வெள்ளம் வருமுன் அணை ! மொழிப்பற்று, தீதென்றால் இந்திக்கு முதன்மைதரல் தீதா காதா? பழிப்புற்ற அம்மொழியைச் செந்தமிழ்ப்பால் பருகுகின்ற சிறுவர்க் கூட்டிச் செழிப்புற்ற..நல்லுணர்வைக் கெடுப்பதுதான் சிறப்பான அறமோ சொல்வீர்! விழிப்புற்றுத் தமிழரெலாம் எழல்வேண்டும்; வெள்ளம் முன் அணையோ டற்கே! . - 1963 நன்றே செய்வீர்! செந்தமிழ்க்குக் காப்பளியா அரசியலைச் சிதைத்தொழிப்பீர்; தமிழர்க் கென்றும் சொந்தமிலாக் குலமுறையைக் கடிந்தெறிவீர்; சோற்றுக்குத் தமிழை விற்றே எந்தமிழ்க்கு வாழ்வளியா ஏடுகளை எரியிடுவீர்; தமிழர் நாட்டில் இந்திக்கு வால்பிடிப்பார் எவரெனினும் அவர்முகத்தில் உமிழ்வீர் நன்றே! -196з