பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 93 உரம் இழந்தீரா? நிலை தளராதா? - இந்திக் களை உலராதா? நெடு நெடுவென, தளதளவெனப் பயிர் வளராதா? - தமிழ்ப் பயிர் வளராதா? அறம் சிறக்காதா? - நெஞ்சில் மறம் பிறக்காதா? அன்று பிறந்த தமிழர் போலத் திறம் இருக்காதா? - மானத் திறம் இருக்காதா? இகழ் நடக்காதா? - இன்பப் புகழ் கிடைக்காதா? இரும்புத் தோள்கள் முனைந்துவிட்டால் துயர் துடைக்காதா? - நாடு உயர் வடையாதா? வெயர்வை சிந்தீரா? - உங்கள் அயர்வை நொந்தீரா? வீட்டுக் கதவைத் திறந்து கொண்டே படைக்கு முந்தீரா? - துயர் துடைக்க வந்தீரா? உரம் இழந்தீரா? - அடிமைத் திறம் விழைந்தீரா? உலகை யாண்ட தமிழர் நீவிர் உடல் குலைந்தீரா? - நாடு கெடல் முனைந்தீரா? - 1959