பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 105 மொழியெனப் படுவது உள்ளுயிர் முழக்கம்! மொழியெனப் படுவது இனநல முயக்கம்! அத்தகு சிறந்த ஆயிர மொழிகளுள் செத்தறி யாத சீரிள மைத்திறம், இலக்கணச் சீர்மை, இலக்கியக் கொழுவளம், துலக்கரு மெய்ம்மை, துள்ளும் எழில்நலம், உரைப்பதற் கினிமை, உள்ளுணர் வுக்கொளி, வரையறு சொற்கள், வான்சீர்ப் பெரும்புகழ் 200 முற்றுங் கொண்டது முத்தமிழ் மொழியே! கற்றிடக் கற்றிட உளங்கனி விப்பதும், மெய்ம்மை கொளுத்தி மேலுக் குய்ப்பதும், செய்வினைத் தூய்மை, சீர்மை, ஒழுக்கம், உயிர்களுக் கூட்டி உறுதுணை நிற்பதும், மயர்வறு வாழ்வை மாந்தர்க் களிப்பதும், செந்தமிழ் செய்பயன்! பிறமொழி தாமும் எந்தமிழ் மொழிபோல் இயற்கையே எனினும், பூத்துக் காய்த்துப் புடைநலங் கனிந்த மாத்தமிழ் மொழிபோல் மனவொளி கொளுத்தும் ஆற்றலும் முதுமையும் அற்றன. வென்பேன்; மாற்றுரை கூறின் மறுப்புரை தருவேன். ஒலித்திறம் வரித்திறம் ஒத்த பொருட்டிறம் வலித்திறம் மெலித்திறம் வாய்ந்த மொழித்திறம் மொழிபயில் இலக்கியம் முகிழ்த்த இலக்கணம் ஒழுகுமெய் யுணர்வின் ஊற்றொடு பல்திறம் ஆயிவை தமிழில் ஆழ்ந்து கிடப்பதை ஏய முறையினால் இயம்புநூல் அறிமின்! இற்றைக் கியல்வன இனிமேல் எழுவன - முற்றும் செந்தமிழ் மொழிக்குள் அடக்கம்! 220 வாயுரை யன்று; வாய்மை உரையிது! தாய்மொழி வெறியால் தருக்குரை அன்று!