பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகலின் அன்பரீர் அந்நாள் நோக்கி ஏகுக நம்முயிர்! ஏகுக நம்முடல்; அந்நாள் சிறைக்கத வகலத் திறக்கும்; அந்நாள் தமிழ்வித் துரன்றுக’ என்றேன்! சிறையகப் பட்டோர் சிறுமை மறந்தே கரையகப் பட்ட கலம்போல் மகிழ்ந்து வாழ்த்தினார் என்றன் வரவை காழ்த்தது மேலுமென் கவினுறு நெஞ்சே! 260 - 1965 75 மும்மொழித் திட்டம் மூளையைக் குழப்பும்! 'இராதெம் நிலத்தில் இந்திப் படிப்பு” - என மொரார்சி தேசாய் செவிப்பறை அறுபட முதல மைச்சர் முழங்கிட வேண்டும்; உதவாப் பேச்சும் உளறலும் வேண்டா! பள்ளிப் பிள்ளைகள் இந்தி படிப்பதைக் கள்ளிப் பாலைக் குடிப்பதாய்க் கருதுக! பேராயக் கட்சிப் பெருந்தலை வர்கள் ஊரா யத்தில் உலாவர விரும்பின் வடவர்க்கும் இந்திக்கும் வால்பிடித் துயிர்ப்பதை விடவும்; அல்லது தம்முயிர் விடவும்: மனநலம், பண்பாடு வேண்டின் தமிழர் இனநலம் பேணுக! இந்தியைத் தவிர்க்க: மும்மொழித் திட்டம் மூளையைக் குழப்பும்! தம்மனம் விரும்பின் தனித்தனி பயில்க! தமிழர் தமிழையும் ஆங்கில மொழியையும் அமிழ்தெனக் கற்க, ஆக்கம் பெறுகவே! - 1967 107