பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணிச்சாறு முதல் தொகுதி இவற்றின் இக்காலத் தேவையை உணர்ந்து கட்டாயம் இத்தொகுதி வரிசையைக் கொணர்ந்துவிடவேண்டும் என்று அருமுயற்சி செய்தவர்களுள் தலையாயவர்கள் தென்மொழி மறை. நித்தலின்பனார் அவர்களும் தென்மொழி ந. முத்துக்குமரன் அவர்களுமே ஆவர். திரு. க. ஆகுன்றன் அம்முயற்சிக்குப் பெரிதும் தூண்டுகோலாய் இருந்தார். வெளியீட்டுக் குழுவினர் பிறரும் என் நன்றிக்கும் பாராட்டிற்கும் உரியவர்கள். இத்தொகுதி வரிசைத் தொடர்பாகப் பாடலைப் படியெடுத்துதவிய தென்மொழி மாணவர் சிலர்க்கும், அவர்களின் அன்புப் பணியை அமைத்துக் கொடுத்த தென்மொழி ந. முத்துக்குமரன் அவர்களுக்கும், அவற்றை ஒழுங்குபடுத்திய தென்மொழி மறை, நித்தலின்பனார்க்கும், அவற்றைச் சரிபார்த்துதவிய, ப. அருளி அவர்களுக்கும், அச்சிட உதவிய என் மகன் மா. பூங்குன்றனுக்கும், அலுவலகப் பொறுப்பாளர் இளமுருகன் அவர்களுக்கும், பிழைதிருத்தப்பட்டி எடுத்துதவிய பேரா. மு.ச. சிவம் அவர்களுக்கும், பொருளடக்கம், பாட்டு முதற்குறிப்பு அகர வரிசை தொகுத்துதவிய செம்பியன் வல்லத்தரசு அவர்களுக்கும், மற்றும் தென்மொழி அச்சகப் பணியாளர்க்கும், அழகிய முகப்போவியம் வரைந்த ஒவியர் அமுதோன் அவர்களுக்கும் என் நெஞ்சு நிறைந்த நன்றியும் பாராட்டும் உரியவாகுக. -(ஒப்பம்) பெருஞ்சித்திரன் →ö岛_一→,