பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பதிப்பு - வெளியீட்டுரை கணிச்சாறு (பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்) முதற்பதிப்பு வெளிவந்து இருபது.ஆண்டுகளுக்குப் பின், அதன் இரண்டாம் பதிப்பு இப்போது வெளிவருகிறது. முதற்பதிப்பின் முத்தொகுதிகளும் தென்மொழியில் சுவடி : 14, ஒலை 12 வரையிலும் மற்றுத் தமிழ்ச்சிட்டில் குரல் 9; இசை 12 வரையிலும் வெளிவந்த பாடல்கள் அளவிலேயே அமைந்தன. அதன்பின் தொடர்ந்து வந்த இதழ்களின் பாடல்கள் அனைத்தும் துறைவாரியாகப் பிரிக்கப்பெற்று எண்தொகுதிகளாக இப் பதிப்பு நிறைவு செய்யப்பெற்றுள்ளது. மேலும், ஐயா அவர்கள் தம் இளமைக் காலத்தில் எழுதியனவும் இதுகாறும் அச்சுக்கு வராதனவுமான பாடல்கள் சில, பழைய குறிப்புச் சுவடிகளினின்றும் எடுத்துச் சேர்க்கப்பட்டுள்ளன; அன்றியும் ஐயா அவர்கள் அன்பர்கள் பலருக்குப் பல்வேறு நிகழ்வுகளையொட்டி எழுதியனுப்பிய பாடல்கள் பல, அவ் அன்பர்களிடமிருந்து பெறப்பட்டும், சில ஐயா அவர்களின் சுவடிகளிலிருந்து எடுத்தும் இணைக்கப் பட்டுள்ளன. (பழைய பாடல்களில் ஒரோவழி இடம் பெற்றிருந்த அயன் மொழிச்சொற்கள் வரிவடிவில் வேறுபடுத்திக் காட்டப் பெற்றுள்ளன.) மொத்தத்தில், ஐயா அவர்களின் தனி இலக்கியங்களான கொய்யாக்கனி, ஐயை, பாவியக்கொத்து, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, நூறாசிரியம், உலகியல் நூறு, கழுதை அழுத கதை, அறுபருவத் திருக்கூத்து ஆகியன அல்லாத பிற பாடல்கள் அனைத்தும் தொகுக்கப்பெற்று 'பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தனிப்பாடல்கள் - அடங்கல்' என்னுமாறு 一...莎s瓦一