பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 16 முத்தமிழ் முப்பது! 1. பாட்டுப் பத்து மூத்த வுணர்வின் முதிர்வசைவால் உள்ளணுக்கள் யாத்த வரியிசையே பாட்டு. வல்லார் நினைத்த நினைவலைகள் வந்துறுத்தச் சொல்லால் எதிரொலித்தல் பாட்டு, காற்றின் துணித்தாய்க் கருத்தலைகள் உள்ளூறி ஊற்றுப் பெருக்குவதே பாட்டு! கிடந்த வொழுங்கின் உணர்வலைகள் நெஞ்சில் நடந்த வொழுங்கிசையே பாட்டு. ஊன்றும் இறையொளிமூண் டுள்ளக் கனலெழுப்பத் தோன்றும் உணர்வொலியே பாட்டு. மூண்ட நெடுநினைவால் முற்றும் உளக்கனியைக் கீண்ட வொலியூற்றே பாட்டு. அண்ட வெளியொலியை ஆகத் தனுப்புகுத்தி விண்ட வுணர்வொழுங்கே பாட்டு. தோற்றம் நிலைப்பொடுக்கம் என்னுந் தொலையுணர்வின் ஏற்றம் விளக்கொலியே பாட்டு. அணுவை அணுத்துடிப்பை ஆன்ற வொளியின் அணுவை ஒலியாக்கல் பாட்டு. . . . . என்றும் இருப்ப திணியொன் றிருப்பதுபோல் என்றும் இருப்பதுவே பாட்டு. 2. கூத்துப் பத்து தானது.வா யெண்ண அதுதானே வந்துளொன்றி ஊனணுவை யுந்துவதே கூத்து. புலம்பற்றி யுள்பற்றிப் பூதங்கள் பற்றித் துலங்கசைவைத் தோற்றுவதே கூத்து.