பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 32 தமிழ்க்கு மூவுடைமை! எடுப்பு நீயே - செந்தமிழ்த் தாயே! - நான் நினையறிந் தவன்; ஒரு சேயே! - முன் நிலைகெட மிகவும்நொந் தாயே, - என் நெஞ்சினில் எழுந்தது; எழுந்தது - தீயே! (-நீயே) தொடுப்பு ஒயேன்; இனியுன்றன் உழைப்பினில் சாயேன்! உடல் பொருள் ஆவியும் ஈவேன்! ஈவேன்! (-நீயே) முடிப்பு காயே விழைவார்; கணிச்சுவை அறியார் ! கண்விழிப்பார்; உளம் விழியார்; - தமிழ்த் தாயே! நின்னறம் நின்பொருள் பேணார் ! தம்செயல் அறிவுக்கு நாணார் ! நானார்! (-நீயே) அயல்மொழி பயில்வார், அதனடி துயில்வார்! அரும்பொருள் அயில்வார்; நினையார்; - மதி மயலுறப் பிறன்கைச் சிறுபொருள் ஆனார்! மற்றிவர் செயலுக்குக் கூனார் ! கூனார்! (-நீயே) பால்கறந் தேபிற கன்றினுக் கூட்டியே, வால்கறப் பார்கழி மூடர் ! - அது போல்சிறந் தாயுனைப் பிறர்கொளத் தந்தார்! புன்மொழி அறிந்துளம் நொந்தார்! நொந்தார்! (-நீயே) - 1962