பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 51 வளர்ந்துவரும் இளையோர்க்கும் மங்கையர்க்கும் நெஞ்சு வளம்கொழிக்கும் அறஞ்சான்ற தமிழ்க்கல்வி வாய்ந்தால் தளர்ந்துவரும் உடல்களிலே வீறுவரும்; தோளில் தாவிவரும் பூரிப்பு; முகத்திலொளி மின்னும்! கிளர்ந்துவரும் மெய்யன்பு, கீண்டியெழும் பண்பு! கிளத்துகின்ற உரைகளெலாம் தேன்சுவையை விஞ்சும்! வளர்ந்துவரும் உளத்தூய்மை! விளைந்துவரும் வாய்மை! வினைகளிலும் அஞ்சாமை நேர்மைவரு மன்றோ? தமிழர்க்குத் தமிழ்நெஞ்சம் வாய்த்துவிடு மாயின் தமிழ்க்குருதி ஊற்றெடுக்கும்; தமிழுணர்வு வீறும்! உமிழ்கின்ற வல்லடிமை மொழியடிமை சாகும்! ஊக்கமிகும்! தாக்கவரும் பகைதுாளாய்ப் போகும்! அமிழ்தூற்றுச் சுனைகரக்கும்; அன்புமனம் பூக்கும்! . அமைதியெழும்; ஆர்ப்பரித்த புன்மைநிலை நீங்கும்! தமிழரறம் செழித்தோங்கும்! உலகதனை வாங்கும்! தாழ்வகலும்! வாழ்வலரும்! தமிழின்பம் அன்றோ? - 1967