பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

வேலியர் யாம்தமிழ்ப் பைம்பயிர்க் கென்றே விதந்துரைப்பார்; கூலியென் னென்று கணக்கிடு வார்; ஒரு

கொள்குறையின்

காலியர் சிற்சில வோர்தமைக் கூட்டிக் கலாம் விளைப்பார்; போலியர்; செந்தமிழ்ப் பொய்ம்மையர் அன்னவர் போக்கறிமே! 9

உணரின் செயலிலை, செய்யின் உரையிலை, ஒர்க;உளம் புணரின் தொடர்பிலை; தோன்றின் முடிவிலை; போலிவினை இனரின் பூத்த இலைபோல் கலித்தே எழுந்தலைக்கும் புணரி வியன்கரை போலதாம்; மெய்வினை

பூநடுவே!

- 1965