பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

மணிவிழியின் இமைதிறந்து மங்கையரீர் வருக! மாணிக்க இதழ்மலர்ந்து மாணவரீர் வருக! அணியணியாய் இளைஞரெல்லாம் ஆர்வமிகக் கொண்டே ஆர்ப்பரிக்கும் மறவரொடு போர்ப்படைக்கே வருக! பணிபுரியுங் காலமிது; பைந்தமிழர் வாழ்க்கை பறித்தெறிந்த கைகளையே முறித்தெறியும் காலம்! துணிவதிர்ந்த தோள்களின்முன் பகைதுள்து.ாள்அன்றோ? தோற்றவர லாற்றினை நாம் மாற்றிடுவோம் வாரீர்! 3

(வேறு)

ஏற்றுதற்கு விளக்கிருக்க இருள்சூழ்ந்த மனையுள்ளே எந்தமிழர் இந்நாளில் வாழ்தலுற்றார்; தேற்றுதற்கு வழியின்றித் திளைப்பதற்கு வாழ்வின்றித் தேவையெனக் காலமெல்லாம் தேய்ந்துபோனார்!

ஆற்றுதற்குப் புலனறியாத் தலைவரெலாம் ஆளுக்கொன் றன்னவர்பால் எடுத்தெடுத்துச் சொல்லலானார் ! மாற்றுதற்கு மனமிலையா? உரமிலையா? வழியிலையா! மறநெஞ்சே விழித்தெழுவாய்! இன்றே! இன்னே!

- 1965