பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

44

71

ஆர்த்த முரசே அறை!

கூர்த்த மதியுடையார் கூடித் தமிழகமேல் போர்த்த பகைகடியப் பொங்கினார் என்றேநீ - சீர்த்த அரிமாப்போல் செங்கட் புலியேபோல் ஆர்த்த முரசாய் அறைவாய் தமிழ்மகனே!

- #956

மானக்கொடி ஊன்றுக!

அடியெடுத்த ஆரியரால் ஆங்கிலரால் வடவரினால் அருந்தமிழர் பட்ட தீங்கைப் படியெடுத்தே அளந்தாலும் பெருந்துலையால் நிறுத்தாலும் பாரோர்க்குப் பங்கிட் டாலும் - துடிதுடித்த நெஞ்சளவில் துளிதீர்மோ? தமிழினத்தின் துயர்தீர்மோ? விடிவு நேர்மோ? ... . . . . . . . . . இடியெடுத்த நெஞ்சத்தீர்! மறக்குலத்தீர்! தமிழ்மானம் இலங்குகொடி ஊன்று வீரே! . . . . . . . . . . ...: ' ' '

- 1966