பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

74

தானே அழியும் தமிழன்!

தமிழனைப் பிறர் யாரும் தாழ்த்தவில்லை - அவன் தம்பியே தாழ்த்துகின்றான்! - இந்தத் தமிழனைப் பிறர் யாரும் வீழ்த்தவில்லை - அவன். தமையனே வீழ்த்துகின்றான்!

தமிழனைப் பிறர் யாரும் சுரண்டவில்லை - இந்தத் தமிழனே சுரண்டுகின்றான்! - இங்குத் தமிழனைப் பிறர் யாரும் கெடுக்கவில்லை - அவன் தனயனே கெடுத்து நிற்பான் !

தமிழ்நாட்டைப் பிறர் யாரும் ஆளவில்லை - இந்தத் Xதமிழனே அடிமை தந்தான்! - இன்று தமிழையும் பிறர் யாரும் சிதைக்கவில்லை - இந்தத் தமிழனே சிதைத்து நிற்பான்!

தமிழ்ப் பண்பைப் பிறர் யாரும் குலைக்கவில்லை - இந்தத் தமிழனே குலைத்து நிற்பான் - நல்ல தமிழ்மானம் தனையாரும் வாங்க வில்லை - இந்தத் தமிழனே விற்றுவிட்டான்!

தமிழனைப் பிறர் யாரும் ... - வள்ைக்க வில்லை! - அட, தமிழனே குனிந்து கொண்ட்ான்! - இங்குத் தமிழனைப் பிறர் யாரும் . ஏவவில்லை - இந்தத் - தமிழனே பணிந்து விட்டான்!

- 1967