பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47.

73

என்னென்று சொல்வோம்?

துறக்கமென்பார்; இறைப் பணியென்பார்; அன்பென்பார்; தொலைசென்று கற்றவர் என்பார் - கண் உறக்க மிலாதுயிர்த் தொண்டென்பார்; பணியென்பார் உலகெலாம் ஒன்றென ஆர்ப்பார்! - சிறக்க வுண்பார்; உடுப்பா ரருஞ் செயல்களைச் சிறப்புறச் செய்தனம் என்பார் - ஆனால் பறக்கும் பறவைக்கும் விலங்குக்கும் இல்லாத பல சாதிப் பிரிவுகள் கொள்வார் !

f

வளியும் எழுசுடர் ஒளியும்ஆப் வார்:கடல் வண்ணமும் மண்ணையும் ஆய்வார் - புற வெளியும் உலாவி விண் கோளுக்குஞ் சென்றுயிர் வீழ்வையும் வென்றனம் என்பார்! வளியும் மடமை யிலாதெங்கும் ஒட்டியே தோற்றுவோம் புத்துல கென்பார் - ஆனால் நெளியும் புழுவுக்கும் பாம்புக்கு மில்லாத நெடுஞ்சாதிப் பிரிவுகள் கொள்வார்! 2

மருவறப் பேணுக உடலென்பார்; உளமென்பார்! மற்றுயிர் போற்றுக வென்பார் : -நிலத் தொருவருக் குணவிலா திருந்திடில் உலகத்தை ஒழித்திடு வோம்;உண்மை யென்பார்! தெருவற ஊற்ற நாள்தோறும் கூட்டங்கள் திட்டங்கள் பற்பல செய்வார் - ஆனால் கருநிறக் காக்கைக்கும் கழுகுக்கும் இல்லாத கடுஞ்சாதிப் பிரிவுகள் கொள்வார் 3

எவர்முகங் கண்டாலும் இழி'சாதிக் குறிகள், ஈங் கெவர்பெயர் பின்னுக்கும் வால்கள் - தெருச் சுவர்களில் இல்லக் கதவுகள் தம்மிலுஞ் . சூழ்ந்தன இழி'சாதிப் பேய்கள்! . . . . . . . . . . . அவ்ரவர் குலத்துக்குத் தனித்தனிக் கழகங்கள்! அவரவர் குலத்துக்குப் பள்ளி - கற்ற எவரெவர் ஆனாலும், குலவெறித் தீமைக்கே இழக்குவர்! என்னென்று சொல்வோம்!

- 1966