பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

ஓ! திரைப்படக்காரரே!

ஓ !

திரைப்படக் காரரே!

திரைப்படக் காரரே!

புரைசெயும் குமுகாயப்

புழுக்களே! ஒ ஓ ! கறைசெயும் மன்பதைக் கைகளே! இருளில் மறைந்திருந் தென்றும் மக்களை உறிஞ்சிக் கொழு கொழு வென்றே கொழுத்துத் திரியும் தொழுநோய்ப் புழுக்களே! திரைப்படக்காரரே!

கதை - எனும் பெயரால் காமக் கழிசடைப் புதையினுள் மூழ்கிப் புரண்டபட் டறிவால் - கற்பனை என்னும் கசிகின்ற சீழை. - ஒட்டைத் துரவலில் ஊற்றிக் கொண்டு பெங்களுர் உதகை குற்றாலம் எனப்போய்த் தங்கி யிருந்தே தறுதலை மொழியில் உளறிக் கொட்டி ஊர்கெடுப் போரே!. களரில் முளைத்த கள்ளிச் செடிகளே!

பாட்டு - எனும் பெயரால் படுக்கை யறையினில் காட்டுக் கழுதைபோல் கட்டிப் புரண்ட நிகழ்ச்சியை எல்லாம் நீட்டி முழக்கி . இகழ்ச்சி சேர்க்கும் இழிதகை யோரே!

இசை - எனும் பெயரால் கெக்கலி இரைச்சலைப் பிசைந்து திரட்டி குரல்தின வடக்க 'ஏஏ என்றும் ஒஓ’ என்றும் . . . . . . . . கோவேறு கழுதைக் குரலில் ஒலித்து வீட்டுக்கு விடு விளங்குவா னொலியில் காட்டுக் கூச்சலைக் காது. புளிக்க அளித்திடும் கயவரே அரைகுறை மாந்தரே! புளித்திடும் கழுநீர்ப் பானைவிழ் வோரே!

கொள்ளை யிடுபணம் கோடிக் கோடியாய், மொள்ளைத் திரைப்படப் பிடிப்பினில் மூழ்க்க, அவலுக்குப் பொக்கையன் அலைவது போல,