பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

83

பண்பெனும் நெறிமுறை புண்படச் செய்த நடிகை யோரே! நடிகை யோரே! பெண்ணாய்ப் பிறந்த பெறலருஞ் சிறப்பை மண்ணாய்ச் செய்யும் நடிகை யோரே!

நடிப்பெனும் பெயரால் நண்டுவாய்க் காலியின் கொடுக்குள் போலக் காலையும் கையையும் நீட்டி மடக்கலும் நெடுங்கூத் தாடலும் மேட்டிலும் பள்ளத்தும் மேனி உருள்வதும்

குழையக் குழையத் தெருநாய் போல இளைய பெண்டிரை வளைய வருவதும் பஞ்சுப் பொதிபோல் படுத்துப் புரள்வதும் சினைத்த பன்றிபோல் உறுமித் திரிவதும் கனத்த குரலில் காட்டுக் கத்தலாய் ஒலம் இடுவதும், புழுப்போல் உடலை நெளிப்பதும் சுழிப்பதும் நெட்டுயிர்ப் புறுவதும் நாண மின்றிக் குரங்குக் குட்டிபோல் கோணங்கித் தனங்கள் செய்வது மாக இளையோர் மனத்தை அலையச் செய்யும் 80 நடிகன் மாரே! நடிகன் மாரே! வடியா இழிமொழி மலவாய் பிலிற்றும் விடியாத் தமிழக நடிகன் மாரே! .

கலை - எனும் பெயரால் காட்டும் திரைப்படக் கொலைக்களம் போகிப் பொழுதினைக் கொல்லும் திரைப்படப் பித்தரே! திரைப்படப் பித்தரே! சிறைப்படும் உள்ளமும் உயிரும் சிதைத்தே கழிசடை நடிகையின் காமத்தோற் றத்தைப் பழியிலா ஒவியம் எனவே வாங்கிச் - சுவரிலும், கதவிலும், சுவடிக் கிடையிலும் 90 உவப்புறச் சட்டைப் பையிலும் வைத்து நாளும் அழுகிடும் உள்ள நைவினால் மேலும் மேலும் சிதைந்தழி கின்ற ... . " திரைப்படப் பித்தரே! திரைப்படப் பித்தரே! மறைவிலாக் கொட்டிய மலக்குவி யல்களே!