பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

கனிச்சாறு இரண்டாம் தொகுதி

யாவரும் கேட்க இதைஉரைக் கின்றேன்: (மேவன செய்கலால் தேவரும் கயவரே :) உங்களை நீங்களே ஒழித்துக் கொள்ளும் . கங்குல் உலகமே திரைப்பட உலகம்! நீங்களும் உங்கள் திரைப்படப் பெண்டிரும் f 0s) யாங்ங்ண மேனும் கட்டிப் புரளுக! . ஒப்புதல் இல்லா ஒழுங்கினால் நீவிர் எப்படி யேனும் புழுத்துச் சாகுக!

ஆனால் உங்கள் அறைகளில் நடப்பதை ஏனோ மக்க ளிடையிலும் காட்டி , இளையோர் மனத்திலும் தீயுணர் வெழுப்பிக், களைகளாம் எண்ணம் கனிய ஊன்றினிர் ? . காசுகள் பறிக்கக் கயமையைக் காட்டி மாசுகள் வளர்த்து மனங்குளிர் கின்றீர்!

காம் நினைவினை எழுப்பலோ கலைகள்: 1 ft) தீமையை விளைப்பதோ திரைப்படக் கூத்து? குயிலொப்பப் பாடும் குரலினுள் ஒருத்தியை. நயமிலாது அலப்பச் செய்வதோ இன்னிசை சென்னைச் சேரியில் மொழிவதோ செந்தமிழ்?, என்ன பயன்களை இவற்றால் செய்குதிர் : மலத்தினால் சந்தன மணம்கூட் டுவதோ ? நிலத்தினால் மழைநீர் நிறந்திரி யாதோ?

நாணம் அறுந்த நங்கையைக் கொண்டு மானம் இன்றி மார்புக் கச்சையை இறுக்கக் கட்டி எடுப்பாய்க் காட்டினால் ‘. . . . . . 120 முறுக்கடை இளைஞரின் மனம்முறி யாதோ?

கடைகெட்ட சிறுக்கியர் காம உணர்வினால் தொடையைக் காட்டினால் மனம்துவ ளாரோ?, அமெரிக்க நாட்டில் அப்படிச் செய்தால் எந்தமிழ் நாட்டிலும் இப்படிச் செய்வதோ?