பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

85

சாய்க்கடை நீருக்குச் சருக்கரை இடுவதால் போய்க்குடித் துவக்கும் புல்லரும் யாவரோ?, பண்புள்ள நாட்டைப் பாழ்செயப் பிறந்தீர்! கண்படைத் திருந்தும் கால்மலம் மிதித்தீர்! திரைக்குள் நடப்பது தெருவில் வருவதா? 130 புரைசெயும் மண்டையுள் புதைந்தது சாணியா? ஆண்கள் என்ன உலா வருகின்றீர்! - மாண்பு தவிர்த்தீர்! மக்களைக் குழப்பினர்!

திரைப்பட நாற்றம் தெருவெலாம் வீசும்! நரைத்த கிழவரும் நல்லிளை யோரும் குரைக்கும் நாய்களும் கூட்டத்துப் பன்றியும் திரைப்படப் பாட்டையே பாடுவதன்றி வேறொரு பாட்டை விளம்பக் கேட்டிலமே! கூறு கூறாகத் தீமையைக் கொட்டினர் ! வாருதற் கெத்தனை அறிஞர் வந் திடினும் #40 சேர்ந்துள குப்பையைக் கூட்டுதல் ஒல்லுமோ?

'டப்பாங் குத்துப் பாடலைத் தவிர ஒப்புங் கருத்திலோர் பாடலை யேனும் திரைப்படப் பாவலன் என்னுமோர் தீயன் உரைப்பக் கேட்டமா? உலகம் பொறுக்குமா? பாட்டுக்கு ஆயிரம் பறிப்பதல்லால் நாட்டுக்கு வந்த நன்மை என்ன? உலகம் உருப்பட உயர்ந்த கருத்தில் இலவயப் பாட்ல் எழுதும் பாவலர் அருந்தமிழகத்தில் ஆயிரம் இருக்க 150 அருந்துங் குடிமயக் குற்ற உளறலைப் பாட்டென வாங்கிப் பசுமை மனங்களில் கேட்டை வளர்க்கும் கேடரே! கேட்க: உங்கள் மனைவியும் மகளும் ஒழுங்கிலா தெங்கணும் நாய்போல் இழிந்து திரிவதை ஒப்புமோ உள்ளம்? ஊர்ப்பெண்டிர் வேறோ? தப்புமோ தரையினை அறைந்தவன் தன்கை',