பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

16.

17.

18.

iş.

20.

2í.

கனிச்சாறு இரண்டாம். தொகுதி

எந்தமிழ் மொழிபேணி வருகநீ யாண்டும், இழந்தநின் பேராற்றல் எழ,அது தூண்டும்! வெந்திறல் ஆண்மையொடு நீஎழல் வேண்டும்! வீழ்கின்ற பகையோடு அடிமையுனைத் தாண்டும்! இன்)

வடவர்க்குத் தமிழ்நாடு வாழும்பட் டயமா?. வல்லதோ ரடிமைக்கு வேண்டுதல் நயமா? மடமைக்குத் தமிழ்நாடு மீன்மேயும் கயமா? மறந்தரும் விறல்தெய்வம் என்றுமவர் வயமா? இன்)

ஏழைக்குப் பாற்சோறும் எறும்புக்கு விண்ணே! எழமுடி யாதவர்க்கு விடுதலை மண்ணே! கோழைக்குத் துணிவேற்றல் முயற்கோடாம் அண்ணே! கும்பிகாய்ந் தாலன்றோ விடுதலைப் பண்ணே! இன்)

நம்மைதாம் வீழ்த்துமோர் நாய்த்தன்மை போலே, நாம்கண்ட தில்லையிங் கிந்நில மேலே ! - தம்மையுந் தாழ்த்தித்தம் இனத்தையும் கீழே, தள்ளுமவ் விழிசெயல் திருத்தாநாய் வாலே! இன்)

மொழிநலம் இனநலம் பேணுதல் அன்றோ முழுநலம் பெறுவழி! நாம்பெறல் என்றோ? விழியுண்டு, வழியுண்டு விரைகிலம், நன்றோ? வீணாக அமர்ந்துண்ண நாம்தென்னங் கன்றோ? இன்)

உரிமைக்கு வித்தெல்லாம் உணர்வெல்லாம் மொழியே! ஊமையன் நெடும்போக்குக் குண்டோநல் வழியே! நரிமைக்கு நாய்மையோ நாட்டாண்மைக் கழியே! நயன்மைக்கும் இயன்மைக்கும் உண்டோஒர் பழியே!

' ' ' .. - - - - - விடுதலைப் பயிர்க்கெரு மொழியின்முன் னேற்றம்! வீணர்க்கும் சோம்பர்க்கும் விளைவுண்டோ மாற்றம்?

படுதலைப் பட்டாயிற் றேன்தடு மாற்றம்: பாய்கின்ற புலியேறே! எங்கேஉன் சீற்றம்? இன்)

- 1969