பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

103

செயலுக்கு முன் வருவோம்!

கொட்டிடு குப்பை நிறைவது போல், அலங் கோல எழுத்தாளர் விஞ்சிவிட்டார்! - வெட்டிமுறிப்பவர் போல்.பலர் மேடையில் வீனுரை யாற்ற முன் வந்து விட்டார்!. கட்டிய கோட்டை முழுவதிலும் வெறும் கற்பனைப் பூண்டை, நிரப்புவதோ ? எட்டி நடையிடு வீர் தமிழ் மாந்தர், ஏற்ற வினைகளைச் செய்திடவே!

உழைப்பைச் சிறிதென எண்ணிடும் மாந்தரிங்(கு) ஊர்வலம் போகவே கூடிவிட்டார் ! . . . . . . . . பிழைப்பைப் பெரிதென எண்ணி விட்டார்; சிலர் பேச்சையே மூச்செனப் பேசிடுவார்! தழைப்பது வோ, தமிழ்ச் செம்பயிர் பேச்சினில்: தன்மானங் கொண்டவர் முன்னெழுவீர்! உழைப்பைப் பெரிதெனப் போற்றிடுவீர்! செயல் ஒன்றே உயர்வென நாமுழைப்போம்! .

- 1977