பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

甘}2

தமிழ்க்குலமே தெளிக!

எங்குமுள பரம்பொருளைக் கோவிலுக்குள் - கருவறைக்குள் இருத்தியதாய் எண்ணியங்கே தங்குமொரு சொறிபிடித்த பார்ப்பானை - ஆரியனைத் தரகனெனக் குந்த வைத்து முங்கியடித் தவன்முன்னே பழந்தேங்காய்த் தட்டெடுத்து நீட்டி அவன் முணுமு னுக்கும் வெங்காய மந்திரத்தை விரும்பியதா

லன்றோ,நாம் இன்றுவரை வீழ்த்தப் பட்டோம் !

கோவிலினைச் சமைத்தவர்நாம் : படிமமொன்றை நட்டவர்நாம்; பொன்மணிகள் கோடிக்கோடி மேவலுற இழைத்தவர்நாம்; ஆண்டு தோறும் விழாப் பலவும் எடுத்தவர்நாம்; மெய்த்தொண் டென்றே காவலராய் அமர்ந்தவர்நாம்; சேர்ப்பவர்நாம்; காப்பவர்நாம்! கடைகெட்ட பார்ப்பான் மட்டும். தேவனென உட்புகுந்து தின்பதுவோ? . . . . . . . . தெறிப்பதுவோ? தமிழ்க்குலமே, தெளிவாய் இன்றே!

- 1977